/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ குழந்தைகளுக்கு நூலகத்தை அறிமுகப்படுத்துங்கள் | லண்டன் பள்ளி ஆசிரியை அட்வைஸ்
குழந்தைகளுக்கு நூலகத்தை அறிமுகப்படுத்துங்கள் | லண்டன் பள்ளி ஆசிரியை அட்வைஸ்
லண்டனை சேர்ந்த ஆசிரியை ஒருவர் கோவை மாவட்டம் அன்னுாருக்கு சமீபத்தில் வந்திருந்தார். அவர் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுடன் பேசினார். தற்போது பள்ளிக்குழந்தைகள் மொபைல் அதிகம் பார்க்கிறார்கள். அதனால் அவர்களிடம் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகிறது. புத்தகம் வாசிப்பதின் முக்கியத்துவம் குறித்து பள்ளிக்குழந்தைகளிடம் அந்த ஆசிரியை எடுத்துக் கூறினார். ஆங்கில அறிவு வளர்த்துக் கொள்வது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். லண்டனில் உள்ள கல்வி முறைகள் குறித்தும், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும், லண்டன் ஆசிரியை கூறிய தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஆக 21, 2024