அறிவியலை மிஞ்சும் பதிமலை வரலாறு | Pathimalai | Coimbatore
இந்த உலகில் பெயரில்லாத ஊர்களே கிடையாது. அதுபோல் கோவையை அடுத்த வேலந்தாவளம் என்ற ஊருக்கு பெயர் வந்ததற்கு அங்கு காட்டு யானைகள் அதிகம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர காட்டு யானைகள் பந்திப்பூரிலிருந்து சிறுவாணி வழியாக பதி மலைக்கு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பதிமலை குகையில் யானைகளின் உருவங்களும் வரையப்பட்டுள்ளன. எனவே பதிமலை குகைக்குள் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் உள்ளன. அறிவியலை மிஞ்சக்கூடிய வரலாறுகள் நிறைந்த பதிமலையின் சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 30, 2024