உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / முதல் இரண்டு இடங்களை பெற்றவர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி | sports | covai

முதல் இரண்டு இடங்களை பெற்றவர்கள் மாவட்ட போட்டிக்கு தகுதி | sports | covai

கோவை கல்வி மாவட்டம் கிழக்கு குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் கே.கே நாயுடு மேல்நிலைப்பள்ளி சார்பில் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 12 மற்றும் 13ம் தேதிகளில் தடகள போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்பட்டன. இதில் மாணவ, மாணவியருக்கு 100 மீட்டர், 200 மீ, 400 மீ, 800 மீ, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்ற செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி அணி மற்றும் மாணவியர் பிரிவில் பி.எஸ்.ஜி.ஜி. கன்யா குருகுலம் பள்ளி அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ மாணவியர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பி.எஸ்.ஜி. சர்வஜனா பள்ளி தலைமை ஆசிரியர் சசிகுமார் பரிசுகளை வழங்கினார். கே.கே. நாயுடு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் முருகேசன், ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆக 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை