சி.ஐ.டி. கல்லுாரியில் அசத்தும் வீரர்கள் | sports | Kovai
கோவை அவிநாசி ரோடு கோயம்புத்துார் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி மைதானத்தில் அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே 9வது மண்டல பால் பேட்மின்டன், கூடைப்பந்து, டென்னிஸ் போட்டிகள் நடக்கிறது. ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் இன்று துவங்கியது. இதில் பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த 12 அணிகள் பங்கேற்றன. போட்டிகளை கல்லுாரி நிர்வாக அலுவலர் ஜேக்கப், முதல்வர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தனர். முதல் போட்டியில் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி அணியும், பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லுாரி அணியும் மோதியது. இதில் 37-26 என்ற புள்ளி கணக்கில் பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லுாரி அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து ஆடிய ஆட்டத்தில் டாக்டர் என்.ஜி.பி. கல்லுாரி அணி 29-18 என்ற புள்ளி கணக்கில் பார்க் கல்லுாரி அணியை வென்றது. ஸ்ரீசக்தி இன்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி அணி 40-20 என்ற புள்ளி கணக்கில் ஜேன்சன் தொழில்நுட்பக் கல்லுாரி அணியை வென்றது. பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லுாரி அணி 29-3 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு இன்ஜினீயரிங் கல்லுாரி அணியை வென்றது. பால் பேட்மின்டன், டென்னிஸ் போட்டிகள் நாளை நடக்கிறது.