ஆடி பூரம் நட்சத்திர அலங்காரம் | Temple Festival | Covai
ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தையொட்டி கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோயிலில் அம்மனுக்கு லட்சம் வளையல்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது தவிர சேலை, கோபுர கலசம், தாமரை, கும்பம், வீணை முதலியவை கண்ணாடி வளையல்கள் கொண்டும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. வளையல் அலங்காரத்தில் அருள்பாலிக்கும் அம்மனை வெள்ளிக்கிழமை வரை தரிசனம் செய்யலாம். அன்றைய தினம் அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையல்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
ஆக 07, 2024