/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சுங்கச்சாவடி கட்டணம் | சுதாரிக்கும் வாகனம் | சிரமப்படும் கிராமங்கள்.
சுங்கச்சாவடி கட்டணம் | சுதாரிக்கும் வாகனம் | சிரமப்படும் கிராமங்கள்.
கோவை-அவினாசி நெடுஞ்சாலையில் உள்ள கணியூர் சோதனை சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம சாலைகள் வழியாக கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. இதனால், அந்த சாலைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. இதை கிராம மக்கள் கேட்டால், நாங்கள் சாலை வரி செலுத்துகிறோம் என்று சொல்லி பெரும்பாலான வாகனங்கள் கிராம சாலைகளை பயன்படுத்துகின்றன. இந்த வழியாக வாகனங்கள் வரக்கூடாது என்று கிராம மக்கள் தடுத்தால் வாக்குவாதம் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கனரக வாகனங்கள் கிராம சாலைகள் வழியாக செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
பிப் 11, 2024