தினமலர் செய்தி எதிரொலி... வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றம்
கோவை வாலாங்குளத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஆகாயத்தாமரை முழுவதும் வளர்ந்திருந்தது. இதனால் அதில் உள்ள தண்ணீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசியது. அந்த குளக்கரையில் வாக்கிங் செல்பவர்களும், சுற்று வட்டார பகுதிகளில் வசிப்பவர்களும் அவதிக்குள்ளானார்கள். இது தொடர்பாக தினமலர் குழு கள ஆய்வு மேற்கொண்டு செய்தி வெளியிட்டது. அந்த செய்தி எதிரொலியாக தற்போது வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரையை கோவை மாநகராட்சி நிர்வாகம் முழுவதும் அகற்றியுள்ளது. இது குறித்து பொது மக்கள் தெரிவித்த கருத்துக்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 06, 2024