/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வீடு எங்களுக்கு சொந்தமா? நிலம் சொந்தமா தெரியல! காத்திருக்கும் 1.5 லட்சம் பேர்
வீடு எங்களுக்கு சொந்தமா? நிலம் சொந்தமா தெரியல! காத்திருக்கும் 1.5 லட்சம் பேர்
கோவை விளாங்குறிச்சி பகுதியில் சில இடங்களை பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது. ஆனால் அந்த இடத்தை வருவாய்த்துறையில் பதிவு செய்யவில்லை. அதன்பின்னர் அந்த இடங்களில் பலர் வீடு கட்டி குடியிருக்கிறார்கள். தற்போது அந்த இடம் சீலிங் என்று சொல்லப்படுவதால் அந்த இடம் மற்றும் வீட்டை விற்க முடியவில்லை. வங்கியில் அடமானம் வைத்து பணம் பெற முடியவில்லை. வீட்டில் மேற்கொண்டு கட்டுவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. விளாங்குறிச்சியில் இப்படி நிலவும் பல இடர்பாடுகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
மார் 11, 2026