/ மாவட்ட செய்திகள்
/ கரூர்
/ பள்ளி மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற சிறப்பு யாகம்| Masi Sangatahara chaturthi| karur
பள்ளி மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற சிறப்பு யாகம்| Masi Sangatahara chaturthi| karur
கரூர் கற்பக விநாயகர் கோயிலில் மாசி மாத சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விநாயகருக்கு எண்ணெய் காப்பு சாற்றி 16 வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தூப தீப ஆரத்தி, பஞ்ச கற்பூர மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்காக சிறப்பு யாகம் வளர்த்து அர்ச்சனை செய்தனர். கோயில் சார்பாக பூஜை செய்யப்பட்ட பேனா மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பிப் 17, 2025