/ மாவட்ட செய்திகள்
/ மயிலாடுதுறை
/ திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | aknipureeswarar temple Kumbabhishekam | Mailaduthurai
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | aknipureeswarar temple Kumbabhishekam | Mailaduthurai
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ளது பஞ்சாக்கை கிராமம். இங்கு தருமபுரம் ஆதீனம் மடத்த்துக்கு சொந்தமான அக்னிபுரீஸ்வரர் கோயில் உள்ளது. தேவார நால்வர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் வைப்பு தலமான இக்கோயிலில் உள்ள அம்பிகையை வழிபட்டால் தீமைகள் விலகி சகல ஐஸ்வர்யமும், ஆயுளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா கடந்த 9ம் தேதி யாக வேள்வியுடன் துவங்கியது. யாக பூஜைகள் முடிந்து தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிகர் சம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஜூலை 12, 2024