ராமநாதபுரம் கேணிக்கரை இயற்கை விவசாயி தரணி முருகேசன் அசத்தல்
ராமநாதபுரம் கேணிக்கரை இயற்கை விவசாயி தரணி முருகேசன் அசத்தல் / Ramanathapuram / Athur kichadi Samba rice Murukku, palm jaggery Mysorepak / Deepavali Special தீபாவளி என்றாலே இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கும் திரு நாள். பட்டாசு, வானவேடிக்கை, பலகாரம், புத்தாடைகள் என களைகட்டும். அதுவும் குழந்தைகளுக்கு இனிப்பு பலகாரம் என்றாலே அலாதி பிரியம் தான். அந்த வகையில ராமநாதபுரம் கேணிக்கரையை சேர்ந்த இயற்கை விவசாயி தரணி முருகேசன் இயற்கை முறையில் நெல், திணை, குதிரைவாலி, கேப்பை உள்ளிட்ட சிறுதானிய பயிர்களையும், காய்கறிகளை விளைவித்து வருகிறார். தனது விவசாயி பண்ணையில் விளைவைக்கும் பொருட்களைக் கொண்டு இயற்கை முறையில் நஞ்சு கலக்காத சிறு தானியங்களை வைத்து இனிப்பு வகைகளை தயார் செய்து, ராமநாதபுரம் கேணிக்கரை இயற்கை அங்காடியில் இனிப்பு வகைகளை பண்டிகை காலங்களில் விற்பனை செய்கிறார். கம்பு, கேழ்வரகு, சோளம், எள்ளு, திணை, ராகி, வேர்கடலை, எள்ளு உள்ளிட்ட சிறு தானியங்களை வைத்து இயற்கை முறையில் 7 வகையான லட்டுகள் தயாரித்து கட்டுப்படியான விலையில் விற்பனை செய்கிறார். இவரது அங்காடியில் மாப்பிள்ளை சம்பா அரிசி, சித்திரகார அரிசி, ஆத்தூர் கிச்சடி சம்பா அரிசி ஆகியவற்றை வைத்து முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட கார அயிட்டங்கள் மிவும் பிரபலம். பசும்பால் பால்கோவா, கருப்பட்டி அல்வா, கருப்பட்டி மைசூர்பா என இந்த தீபாவளிக்கு புதிய வரவாக உள்ளது. இயற்கை முறையில் தயார் செய்யப்படுவதால் பொமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆர்டரின் பேரில் சிறுதானிய லட்டு மற்றும் பாரம்பரிய அரிசியை பயன்படுத்தி தரணி முருகேசன் தயாரிக்கும் பலகாரங்களுக்கு மவுசு அதிகரித்த வண்ணம் உள்ளது.