திரளான பக்தர்கள் தரிசனம் | Kanakakujambal Temple Brahmmotsavam
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பஜார் தெருவில் உள்ள ஸ்ரீ சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் நடக்கிறது. 4ம் நாள் விழாவில் சோழப்புரீஸ்வரர் கனககுஜம்பாள் சுவாமிக்கு மகா தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி நான்கு மாட வீதி உலா வந்து அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மே 16, 2024