உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவாரூர் / பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிப்பு | Thyagaraja Temple Celebrations

பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனித நீர் தெளிப்பு | Thyagaraja Temple Celebrations

திருவாரூர் அருகே திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற பழமையானது தியாகராஜர் கோயில். இங்கு தியாகராஜ சுவாமி மூலவராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலி்க்கிறார். கடந்த ஓராண்டாக நடந்த கோயில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த 29ம் தேதி கும்பாபிேஷக யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் முடிந்து இன்று கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுரங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. புனித நீர் பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது.

பிப் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !