உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ₹1 லட்சம் லஞ்சம் வாங்கிய தனிப்படை போலீஸ் | Police Suspended | Tiruchi Police | Tiruchi SP

₹1 லட்சம் லஞ்சம் வாங்கிய தனிப்படை போலீஸ் | Police Suspended | Tiruchi Police | Tiruchi SP

திருச்சி மாவட்டம் மணப்பாறை புத்தாநத்தம் உட்கோட்டத்திற்கு எஸ்ஐ லியோனி, வீரபாண்டி, ஷாகுல் ஹமீது மற்றும் மணிகண்டன் ஆகிய போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு இருந்தது. தனிப்படையினர் கடந்த மே மாதம் சின்னகோனார்பட்டியில் சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஏர் கன் மூலம் பறவைகளை வேட்டையாடிய சதாசிவம் , ராமசாமி , நாகராஜை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மீது வழக்கு பதியாமல் தப்பிக்க வைக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. ஏரிக்கரைக்கு அருகில் தனிப்படையினர் பணத்தை வாங்கி கொண்டதாகவும் எஸ்பிக்கு போனில் தகவல் சென்றது.

ஆக 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை