/ தினமலர் டிவி
/ பொது
/ ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் குலதெய்வ வழிபாடு | Aadiperuku festival |Senniyamman temple | Chengam
ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் குலதெய்வ வழிபாடு | Aadiperuku festival |Senniyamman temple | Chengam
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ளது புதுப்பட்டு கிராமம். இங்கு வசிக்கும் மக்கள் ஆண்டுதோறும் தங்களது குலதெய்வமான நீப்பத்துறை சென்னியம்மனின் ஆடிப்பெருக்கு விழாவில் குடும்பத்துடன் சென்று வழிபடுவது வழக்கம். புதுப்பட்டில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோயிலுக்கு ஒரு நாள் முன்பே மாட்டு வண்டிகளில் புறப்படுகின்றனர். இதற்காக மாட்டு வண்டிகளை ஸ்பெஷலாக அலங்கரித்து, மாடுகளுக்கு கொம்பில் கொப்பி சூடி கழுத்திலும் காலிலும் மணி கட்டி, உற்சாகமாக குடும்பத்தினர், உறவினர்களை கோயிலுக்கு அழைத்து செல்கின்றனர்.
ஆக 03, 2024