உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுற்றுச்சூழல் மாசு தொடர்பான மனுவில் பசுமை தீர்ப்பாயம் யோசனை! Aavin milk | Plastic Packaging

சுற்றுச்சூழல் மாசு தொடர்பான மனுவில் பசுமை தீர்ப்பாயம் யோசனை! Aavin milk | Plastic Packaging

தரமான பிளாஸ்டிக் பாட்டிலில் ஆவின் பால் விற்க முடியுமா? ஆய்வு செய்ய தீர்ப்பாயம் உத்தரவு! தமிழகத்தில் பால் தயிர் வெண்ணெய் நெய் போன்ற பால் பொருட்கள் பிளாஸ்டிக் பைகள் டப்பாக்களில் அடைத்து விற்கப்படுகின்றன. மட்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகளை சேகரித்து மறுசுழற்சி செய்ய ஆவின் நிறுவனம் எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. பிளாஸ்டிக் பைகளை துாக்கி எறிவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, கண்ணாடி பாட்டில்கள் அல்லது டெட்ரா பாக்கெட்டுகளில் பால் விற்க உத்தரவிட வேண்டும் என சென்னையைச் சேர்ந்த சுரேந்திரநாத் கார்த்திக் அய்யா என்பவர்கள் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.

டிச 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி