ஆடிப்பூரத்தில் அம்மனை தரிசித்த பெண்களுக்கு வளையல் பிரசாதம்
ஆடிமாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்மனுக்கு மிகவும் உகந்த நாள். ஆடிப்பூரமான இன்று அம்மன் கோயில்களில் வளையல் காப்பு சிறப்பு பூஜைகள் நடந்தன. சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில், மீனாட்சி அம்மன் சன்னதியில் அம்மனுக்கு வளையல் காப்பு வைபவம் விமர்சியாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்ட வளையல்களுடன் மங்கள பொருட்கள் பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.
ஜூலை 28, 2025