/ தினமலர் டிவி
/ பொது
/ நெரிசலில் சிக்கி அட்மிட் ஆனவர்களுக்கு சோகம்! | Air Show | Air Force | Chennai | Chennai Marina
நெரிசலில் சிக்கி அட்மிட் ஆனவர்களுக்கு சோகம்! | Air Show | Air Force | Chennai | Chennai Marina
வான் சாகசம் பார்க்க வந்த போது துயரம் பறிபோன 2 உயிர்கள்! சென்னை மெரினா பீச்சில் விமானப்படையினரின் வான் சாகச நிகழ்ச்சி இன்று நடந்தது. இதை காண 15 லட்சத்துக்கும் மேலானோர் திரண்டனர். நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது பலர் நெரிசலில் சிக்கி கடும் அவதிக்கு ஆளாகினர். முறையான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படாததால் ரயில் நிலையங்களில் மக்கள் மணிக்கணக்கில் அலைமோதினர். மக்கள் கூட்டத்தால் சென்னை சாலைகள் ஸ்தம்பித்தன. மெரினாவை ஒட்டியுள்ள சாலைகளில் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது. நெரிசலில் சிக்கி அடுத்தடுத்து பலர் மயங்கி விழுந்தனர்.
அக் 06, 2024