ஜெயபிரகாஷ் நாராயணன் தொடர்பான அரசியலால் பரபரப்பு! Akilesh Yadav | Former CM | UP | Yogi CM | JP Centr
எமர்ஜென்சி காலத்தில் இந்திராவுக்கு எதிராக மக்கள் இயக்கத்தை கட்டி அமைத்தவர் ஜே.பி. என சுருக்கமாக அழைக்கப்படும் ஜெயபிரகாஷ் நாராயணன். சோஷலிச தலைவராக போற்றப்படும் அவருக்கு இன்று பிறந்தநாள். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ஜெயபிரகாஷ் நாராயணன் சர்வதேச மையம் உள்ளது. அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருந்தார். ஆனால் அங்கு யாரும் நுழைய முடியாதபடி தகர ஷீட்டுகளை கொண்டு அந்த மையத்தின் நுழைவு வாயில் மூடி மறைக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ், யாதவ் ஜெயப்பிரகாஷ் நாராயணன் சர்வதேச மையத்துக்கு நேற்று இரவு சென்றார். அவருடன் சமாஜ்வாடி கட்சி தொண்டர்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சர்வதேச மையத்தின் நுழைவு வாயிலில் தகர ஷீட்டுகளைப் போட்டு மறைத்தது எதற்காக என அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பினார். அந்த ஷீட்டுகளின் மீது ஏறி சர்வதேச மையத்துக்குள் செல்லவும் அவர் முயன்றார். போலீசார் அதை தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் உத்தரபிரதேச முதல்வருக்கு எதிராகவும், பாஜவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் இழுத்துச் சென்றதால் மோதல் வெடித்தது. போலீசாருக்கும், சமாஜ்வாடி தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.