ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீங்க: அண்ணாமலை Annamalai | BJP | Anbil Mahesh | DMK
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பகுதிநேர பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் ஒரு விழா மேடையில் என்னை வசை பாடியதாக அறிந்தேன். உங்க வீட்டு பிள்ளைகள் மும்மொழி கற்கலாம், அரசு பள்ளியில் படிக்கும் எங்க பிள்ளைகள் மூன்று மொழி படிக்க உங்க அரசியல் தடையாக இருந்தால் அதற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் எழுப்புவோம். அதற்காக நீங்கள் என்னை வசை பாடினால், அதன் அர்த்தம், நான் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன் என்பதுதான். சொந்த மாவட்டத்தில், மரத்தின் நிழலில் மாணவர்கள் கற்கும் அவலத்தை கண்டும், காணாமல் இருக்க, ஒரு கல் நெஞ்சம் வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய் எங்குதான் சென்றதோ தெரியவில்லை. நீங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் செழிக்க, அரசு பள்ளிகளில் பயிலும் எங்கள் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்காதீர்கள் என அண்ணாமலை கூறி உள்ளார்.