உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காதலனை பிரித்ததால் தீக்குளித்து உயிரை மாய்த்த இளம்பெண் | Arani love marriage | Parents problem | Cou

காதலனை பிரித்ததால் தீக்குளித்து உயிரை மாய்த்த இளம்பெண் | Arani love marriage | Parents problem | Cou

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்கள் கணேசன் - தமிழ்ப்ரியா தம்பதி. இவர்களின் 21 வயது மகள் பூஜா, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள நர்சிங் கல்லூரியில் நர்சிங் படித்தார். இதற்காக கஸ்தம்பாடி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருக்கும் பெரியம்மா தமிழ்செல்வி வீட்டில் தங்கி இருந்தார். அப்போது அதே முகாமை சேர்ந்த ராமகிருஷ்ணன் - சிவாஜினி தம்பதியின் 19 வயது மகன் சரண்ராஜூடன் பழக்கம் ஏற்பட்டது. தன்னை விட 2 வயது குறைவாக இருந்தாலும் சரண்ராஜ் உடனான நட்பு காதலாக மாறியது. 2 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும், பூஜா வீட்டில் எதிர்த்ததால் எதிர்ப்பை மீறி திருவண்ணாமலையில் திருமணம் செய்து கொண்டனர். பின் பாதுகாப்பு கோட்டு ஆரணி மகளிர் போலீசில் தஞ்சம் அடைய சென்றவர்களை, போலீஸ் நிலையத்திற்கு 10 மீட்டர் முன்பு உள்ள ஒரு கோயில் அருகே பூஜாவின் பெற்றோரும், உறவினர்களும் மடக்கினர். தகவலறிந்து சரண்ராஜ் பெற்றோரும் அங்கு வந்தனர். அதற்குள் பூஜாவின் உறவினர்கள் சரண்ராஜை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

மார் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ