/ தினமலர் டிவி
/ பொது
/ பணத்துடன் தப்ப முயன்ற கொள்ளையர்களை தடுத்தது விபத்து! | Bank ATM robbery | Police Investigation
பணத்துடன் தப்ப முயன்ற கொள்ளையர்களை தடுத்தது விபத்து! | Bank ATM robbery | Police Investigation
திருப்பத்துார் ஜோலார்பேட்டை அருகே கோடியூர் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளது. நேற்று இரவு ஏடிஎம்மில் பணம் நிரப்ப பாதுகாப்பு வாகனத்தில் வங்கி ஊழியர்கள் வந்தனர். வாகனத்தை ஏடிஎம் முன் நிறுத்தி விட்டு 36 லட்சம் இருந்த பணப்பையுடன் இறங்கினர். அப்போது அவர்கள் சுதாரிக்கும் முன் முகமூடி அணிந்து பைக்கில் வந்த 2 ஆசாமிகள் பணப்பையை பறித்தனர். அதே வேகத்தில் பைக்கை கிளப்பி தப்ப முயன்ற போது எதிரே வந்த மற்றொரு பைக் மோதியது. இதில் பணப்பை தூக்கி வீசப்பட்டது. கீழே விழுந்த 2 ஆசாமிகளும் பைக்கை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினர்.
பிப் 04, 2025