உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாலியல் புகாரில் சிக்கிய ஐபிஎஸ் அதிகாரியால் பரபரப்பு | Joint commissioner suspended | Chennai north

பாலியல் புகாரில் சிக்கிய ஐபிஎஸ் அதிகாரியால் பரபரப்பு | Joint commissioner suspended | Chennai north

சென்னை வடக்கு மண்டல டிராபிக் போலீஸ் இணை கமிஷனராக பணியாற்றி வருபவர் மகேஷ்குமார். ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக டிராபிக் பெண் போலீஸ் ஒருவர், சமீபத்தில் டிஜிபி சங்கர் ஜிவாலிடம் புகார் அளித்தார். புகார் தொடர்பாக விசாரிக்க டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டது. பாலியல் தொல்லை புகாரில் அடிப்படை முகாந்திரம் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. உடனடியாக இணை கமிஷனர் மகேஷ்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். விசாரணை தொடரும் நிலையில் மகேஷ்குமாரை சஸ்பணெ்ட் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். விசாகா கமிட்டியின் விசாரணை அறிக்கையை தொடர்ந்து மகேஷ்குமார் மீது அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே சிறப்பு டிஜிபி, ஐஜி ஒருவரும் பாலியல் புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி