வெள்ளத்தில் சிக்கியவர்கள் டிராக்டர், படகு மூலம் மீட்பு
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடே, வடகிழக்கு பருவமழையும் தொடங்கி இருப்பதால் கனமழை வெளுத்து வாங்குகிறது. சென்னை வேளச்சேரி மற்றும் அதன் அற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால், ஏஜிஸ் காலனி, விநாயக புரம், கல்கிநகர், பத்மாவதி நகர், ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை சுற்றிலும் சுமார் 4 அடிக்கு தண்ணீர் தேங்கியது. வீடுகளுக்கு உள்ளேயும் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.
அக் 15, 2024