குமரியில் நொறுங்கிய கண்டக்டர் குடும்பம் conductor dies in MTC bus chennai crime chennai police pass
கன்னியாகுமரி மாவட்டம் கீழ்க்குளம் அருகே பரவை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் குமார் (54). சென்னை சைதாப்பேட்டையில் தங்கி, மாநகர் போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு 8.30 மணியளவில் எம்.கே.பி நகரில் இருந்து கோயம்பேடுக்கு கிளம்பிய 46ஜி பஸ்சில் பணியில் இருந்தார். அமைந்தகரையில் கோவிந்தன் வயது 53 என்பவர் தனது மனைவியுடன் முன்பக்க படிக்கட்டு வழியாக பஸ்சில் ஏறினார். பின்சீட்டில் உட்கார்ந்திருந்த ஜெகன் குமார் டிக்கெட் எடுக்கும்படி கோவிந்தனிடம் சொன்னார். போதையில் இருந்த கோவிந்தன் கண்டக்டரை திட்ட இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கோவிந்தன் தலையில் டிக்கெட் எந்திரத்தால் கெஜன்குமார் அடித்தார்.