/ தினமலர் டிவி
/ பொது
/ அடுத்தடுத்து கிரெடிட் ஆன லட்சங்கள்! ரவுடி தலைமறைவு | Cuddalore Police | money Deposit | Investigati
அடுத்தடுத்து கிரெடிட் ஆன லட்சங்கள்! ரவுடி தலைமறைவு | Cuddalore Police | money Deposit | Investigati
கடலூர் பேர்பெரியான் குப்பத்தை சேர்ந்தவர் அசோக் குமார். சரித்திர பதிவேடு குற்றவாளியான அசோக் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட 10க்கும் மேலான வழக்குகள் உள்ளது. அசோக் முத்தாண்டி குப்பத்தில் உள்ள வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவரது வங்கி கணக்குக்கு கடந்த மாதம் மட்டும் இரண்டரை கோடி பணம் கிரெடிட் ஆனது. 10, 20, 50, 60 லட்சம் என அடுத்தடுத்து பணம் வந்ததால் வங்கி அதிகாரிகளுக்கு சந்தேகம் கிளம்பியது. அசோக் குமாரிடம் விசாரித்தனர். தான் பங்கு சந்தையில் முதலீடு செய்ததாகவும், அதில் வந்த லாபம் எனவும் கூறினார். அதிகாரிகள் சோதனையில் அசோக் கூறியது பொய் என கண்டு பிடித்தனர்.
ஆக 13, 2024