/ தினமலர் டிவி
/ பொது
/ விவசாய கடன் வாங்கி தருவதாக பெண்களிடம் நூதன மோசடி | Fraud | Scam | Erode police
விவசாய கடன் வாங்கி தருவதாக பெண்களிடம் நூதன மோசடி | Fraud | Scam | Erode police
ஈரோடு ஆப்பக்கூடல் வேல மரத்தூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கருணாமூர்த்தி, வயது 31. அந்தியூர், பவானி மற்றும் சுற்றுப்புற பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களிடம் நபார்டு வங்கியில் விவசாய கடன் மானியத்துடன் வாங்கி தருவதாகவும், அதற்கு குறைந்த வட்டி என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி அந்தியூர் புது மேட்டூர் பகுதியை சேர்ந்த சசிகலா கடன் பெற கருணாமூர்த்தி கேட்ட 12 பவுன் நகையை கொடுத்துள்ளார். கருணாமூர்த்தியும் விவசாய கடன் கிடைத்து விட்டதாக கூறி குறிப்பிட்ட தொகையை சசிகலாவிடம் வழங்கியுள்ளார்.
டிச 25, 2024