அவதூறு வழக்கில் ஜாமின் கிடைத்தும் சோதனை Goondas act against Savukku Shankar| Bail for Savukku Shanka
பெண் போலீசாரை அவதுாறாக பேசியதாக, யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது தமிழகத்தின் பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மே மாதம் சங்கர் கைதானார். அவர் கஞ்சா வைத்திருந்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவதுாறு கருத்துக்களை தெரிவித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. குண்டர் சட்டத்தில் வழக்கு பதிந்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது. வழக்குகளில் தேவைப்படாவிட்டால் அவரை விடுதலை செய்யலாம் எனவும் கோர்ட் அறிவுறுத்தியது. பெண் போலீசாரை அவதுாறாக பேசிய வழக்கில், ஊட்டி கோர்ட் திங்கட்கிழமை ஜாமின் வழங்கியது. சங்கர் ஜாமினில் வெளி வரலாம் என கூறப்பட்டது.