/ தினமலர் டிவி
/ பொது
/ வெள்ளத்தால் அனைத்தையும் இழந்து கதறும் இருவேல்பட்டு மக்கள் | Heavy rain | Flood affects | Iruvelpattu
வெள்ளத்தால் அனைத்தையும் இழந்து கதறும் இருவேல்பட்டு மக்கள் | Heavy rain | Flood affects | Iruvelpattu
பெஞ்சல் புயல் மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வீடுகள், கடைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். பல இடங்கள் குட்டி தீவு போல் காட்சியளிக்கிறது. இந்த சூழலில் தான் தென்பெண்ணை ஆற்றில் அதிக தண்ணீர் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளம் விழுப்புரம் அருகே உள்ள இருவேல்பட்டு, அரசூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் புகுந்தது. வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் வெள்ளம் அடித்து சென்ற நிலையில், உணவு, தண்ணீர் இன்றி அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர்.
டிச 03, 2024