/ தினமலர் டிவி
/ பொது
/ சரக்கு ரயில் மீது மோதிய பயணிகள் ரயில் Howrah - Mumbai superfast express rail|derailed |Jharkhand
சரக்கு ரயில் மீது மோதிய பயணிகள் ரயில் Howrah - Mumbai superfast express rail|derailed |Jharkhand
மேற்குவங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கு அதிவிரைவு பயணிகள் ரயில் நேற்றிரவு புறப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் இருந்து 80 கிமீட்டர் தொலைவில் உள்ள பரபாம்பூ இடத்துக்கு அருகே அதிகாலை 3.45 மணிக்கு ரயிலின் 18 பெட்டிகள் தடம்புரண்டன. எதிரே வந்த சரக்கு ரயில் முதலில் தடம் புரண்டு, பயணிகள் ரயில் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை ரயில்வே மீட்பு குழுவினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜூலை 30, 2024