/ தினமலர் டிவி
/ பொது
/ பாம்புகளை பாலூட்டி வளர்த்த திமுக புள்ளி: பகீர் பின்னணி indian cobra|man arrested for keeping cobra
பாம்புகளை பாலூட்டி வளர்த்த திமுக புள்ளி: பகீர் பின்னணி indian cobra|man arrested for keeping cobra
கொடிய விஷம் கக்கும் நல்ல பாம்புகளை கூண்டில் அடைத்து 2 வருடமாக பால், முட்டை கொடுத்து, பாசத்தையும் சேர்த்து ஊட்டி வளர்த்து வந்த திமுக நிர்வாகியை வனத்துறை தட்டி தூக்கிய சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைதான திமுக நிர்வாகியின் நல்ல பாம்புகள் மீதான அலாதி பிரியம் வனத்துறையினரையே ஆட்டம் காண செய்திருக்கிறது. அப்படி ராமநாதபுரத்தில் என்ன தான் நடந்தது என்பதை பார்க்கலாம். ராமநாதபுரத்தில் தாதனேந்தல் என்ற ஊராட்சி உள்ளது. இதன் பஞ்சாயத்து தலைவராக கோகிலா என்பவர் இருக்கிறார். கோகிலாவின் கணவர் தான் அந்த பாம்பு பிரியர் ராஜேந்திரன்.
ஜன 10, 2025