டெலிவரி பாயை வீட்டுக்குள் விட்ட இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி IT Girl|sexual harrassment
சென்னை மடிப்பாக்கம் குபேரன் நகரை சேர்ந்த 26 வயது இளம்பெண், ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தனியாக வீடுஎடுத்து தங்கியுள்ளார். கடந்த 13ம் தேதி ஜெப்டோ ஆப் மூலம் மளிகை பொருட்களை ஆர்டர் செய்தார். ஆர்டர் செய்த பொருட்களை கோபிநாத் என்ற செப்டோ டெலிவரி பாய் வீட்டுக்கு கொண்டு வந்து டெலிவரி செய்தார். பொருட்கள் சரியாக இருக்கிறதா? என பெண் சரிபார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, செல்போனில் சார்ஜ் இல்லை; சிறிது நேரம் சார்ஜ் போட்டுக் கொள்ளவா என கோபிநாத் கேட்டுள்ளார். டெலிவரி பாய்க்கு ஃபோன்தானே முக்கியம் என நினைத்த ஐடி ஊழியர் சரி என்றார். கோபிநாத் ஹாலில் இருந்த பாய்ண்ட்டில் சார்ஜ் போட்டார். இளம்பெண் தனியாக இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, நைசாக பேச்சுக் கொடுத்தார்.