/ தினமலர் டிவி
/ பொது
/ உலுக்கும் ரயில் விபத்தின் உண்மை பின்னணி jalgaon train tragedy | truth behinds jalgaon train accident
உலுக்கும் ரயில் விபத்தின் உண்மை பின்னணி jalgaon train tragedy | truth behinds jalgaon train accident
மகாராஷ்டிராவில் நேற்று நடந்த கோர ரயில் சம்பவம் நாட்டையே உலுக்கியது. அப்பாவி பயணிகள் 13 பேர் மரணம் அடைந்தனர். பலர் காயம் அடைந்தனர். இவ்வளவு பெரிய சோகத்துக்கு காரணம் ஒரு பொய் என்பது தான் இப்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். லக்னோவில் இருந்து மும்பை நோக்கி புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டு இருந்தது. மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தின் மாஹேஜி மற்றும் பர்தாதே என்ற ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே பச்சோரா என்ற இடத்தில் வந்த போது ரயில் தீப்பற்றியதாக அபய குரல் வந்தது. உடனே ஒருவர் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தார். வேகம் குறைந்த ரயில் அடுத்த சில வினாடிகளில் நின்றது.
ஜன 23, 2025