உலகை உலுக்கப்போகும் அடுத்த பேரழிவு | Japan Earthquake | megaquake kill 300,000 people
பிளக்க போகும் கடல் 3,00,000 மக்களின் உயிருக்கு ஆபத்து ஜப்பான் வெளியிட்ட பகீர் அறிவிப்பு! மியான்மர் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7 புள்ளி 7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மூன்றாயிரம் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்தனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மியான்மரில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்திற்குப் பிறகு ஜப்பானுக்கு மெகா நிலநடுக்கம் ஏற்பட 80 சதவீதம் வாய்ப்புள்ளது என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜப்பான் உலகின் நிலநடுக்கங்களை அதிகம் சந்திக்கும் நாடுகளில் ஒன்று. காரணம் பசிபிக் தீவிர வளையம் (Pacific Ring of Fire) எனப்படும் பூகம்பத்தகட்டு சந்திப்பு பகுதியில் அமைந்திருப்பதே ஆகும். ஜப்பானில் உள்ள நாங்காய் பள்ளத்தாக்கு (Nankai Trough) நிலநடுக்கத்தின் மையமாக உள்ளது. இது இரட்டை பூகம்பத் தகட்டுகள் சந்திக்கும் இடமாக உள்ளது. இங்கு பிலிப்பைன் கடல் தட்டும், யூரேசிய தட்டும் மோதிக்கொள்கின்றன. இதன் காரணமாக பூமியின் உள் அழுத்தம் அதிகரித்து, ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் உருவாகும் அபாயம் உள்ளது. சராசரியாக ஒவ்வொரு 100 முதல் 150 வருடங்களுக்கும் இடையே இந்தப் பகுதி பெரிய பூகம்பங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வரலாறு சொல்கிறது.