சிறையில் செல்போன் கிடைத்தது எப்படி?
கன்னட திரைப்பட நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் தற்போது சிறையில் இருக்கிறார். தமது காதலியான நடிகை பவித்ராவை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்ட ரசிகர் ரேணுகா சுவாமியை கொலை செய்த வழக்கில், தர்ஷன் மற்றும் அவரது மேலாளர் நாகராஜ், பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் தர்ஷன் சொகுசு வசதிகளுடன் ஜாலியாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் போட்டோ வெளியானது. தனது மேனேஜர் உள்ளிட்டோருடன் கையில் டீ கப், சிகரெட்டுடன் தர்ஷன் ஹாயாக உட்கார்ந்திருக்கும்போட்டோ சர்ச்சையை கிளப்பியது.
ஆக 27, 2024