உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மின் கோபுரங்களை காக்க மின் ஊழியர்கள் முயற்சி! Kaveri | Kollidam | Trichy | Checkdam

மின் கோபுரங்களை காக்க மின் ஊழியர்கள் முயற்சி! Kaveri | Kollidam | Trichy | Checkdam

திருச்சி, கொள்ளிடம் ஆற்றில் நீரோட்டம் ஏற்படும் போது, நேப்பியர் பாலம் அருகே மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க, பாலத்திற்கு அருகே தடுப்பணை கட்டப்பட்டது. மொத்தம், 850 மீட்டர் நீளத்தில், 6.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த தடுப்பணை, சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. இந்நிலையில், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 60,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீரோட்டத்தை தாக்கு பிடிக்க முடியாமல், புதிய தடுப்பணையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நீரோட்டம் அதிகரித்து, தற்போது தடுப்பணையை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. வெள்ளப்பெருக்கு குறைந்த பின்பே, தடுப்பணை எவ்வளவு துாரத்திற்கு சேதமடைந்தது என்பது முழுமையாக தெரியவரும். இதற்கிடையே, இந்த தடுப்பணை அருகில் இருந்த உயர் அழுத்த மின் கோபுரத்தின் கான்கிரீட் துாண்களும் வெள்ளத்திற்கு தாக்குபிடிக்க முடியாமல், சாய்வு நிலைக்கு வந்தது.

ஆக 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ