/ தினமலர் டிவி
/ பொது
/ ருத்ரபிரயாக்கில் நிலச்சரிவில் சிக்கிய 100 பேரை மீட்டவர்களுக்கு பாராட்டு! Kedarnath flood | Kedarnat
ருத்ரபிரயாக்கில் நிலச்சரிவில் சிக்கிய 100 பேரை மீட்டவர்களுக்கு பாராட்டு! Kedarnath flood | Kedarnat
உத்தராகண்ட் மாநிலம் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களுக்கான சார்தாம் புனித யாத்திரை தொடங்கி உள்ளது. நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சார்தாம் யாத்திரைக்காக உத்தராகண்ட் வருகின்றனர். இந்த நிலையில், அங்கு பெய்யும் கனமழையால், அவ்வப்போது வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு ஏற்படுகிறது. மோசமான வானிலையால் சமீபத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலியாகினர். ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவில், பக்தர்கள் சிலர் இறந்தனர். சிலர் காயம் அடைந்தனர்.
ஜூலை 26, 2025