/ தினமலர் டிவி
/ பொது
/ கரும்புகை வெளியேறியதால் நோயாளிகள் அச்சம் | Kilpauk Hospital | Govt Hospital | Chennai Hospital
கரும்புகை வெளியேறியதால் நோயாளிகள் அச்சம் | Kilpauk Hospital | Govt Hospital | Chennai Hospital
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 6 மாடிகள் கொண்ட பிரதான கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு அறையில் தீ பிடித்ததால் நோயாளிகள் பதறினர். அங்குள்ள நோயாளிகள் உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். வெளியேறிய கரும்புகையால் மருத்துவமனையில் பரபரப்பான சூழல் நிலவியது. கீழ்ப்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட 3 இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து மற்ற இடங்களுக்கு பரவாமல் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். https://subscription.dinamalar.com/?utm_source=ytb
ஆக 17, 2024