/ தினமலர் டிவி
/ பொது
/ 3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட போலீஸ்; தப்பிய கும்பல் | Madurai | Madurai Police
3 மணி நேரத்தில் மாணவனை மீட்ட போலீஸ்; தப்பிய கும்பல் | Madurai | Madurai Police
மதுரை எஸ்எஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜலெட்சுமி. கணவனை இழந்த இவர் தந்தையுடன் வசித்து வருகிறார். இவருக்கு காம்ப்ளக்ஸ் மற்றும் வீடுகள் உள்ளது. ராஜலெட்சுமியின் 14 வயது மகன் 7ம் வகுப்பு படிக்கிறார். காலையில் ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவனை பொலிரோ காரில் வந்த ஒரு கும்பல் வழி மறித்தது. கத்தியை காட்டி மிரட்டி சிறுவனை காரில் ஏற்றினர். ஆட்டோ டிரைவர் பால்பாண்டியையும் தாக்கி உடன் கடத்தி சென்றனர். சிறிது நேரம் கழித்து ராஜலெட்சுமிக்கு, பால்பாண்டி நம்பரில் இருந்து கால் வந்தது. கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவன் 2 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தான்.
ஜூலை 11, 2024