உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மதுரை இளைஞரை ரவுடிகள் விரட்டி வெட்டும் பகீர் காட்சி madurai crime case |madurai cctv| jaihindpuram

மதுரை இளைஞரை ரவுடிகள் விரட்டி வெட்டும் பகீர் காட்சி madurai crime case |madurai cctv| jaihindpuram

துரை சோலை அழகுபுரம் மகாலட்சுமி கோயில் தெருவை சேர்ந்த இளைஞர் கார்த்திக். சோலை அழகுபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்ற சில ரவுடிகளை கார்த்திக் மற்றும் அவரது அப்பா பாண்டி தட்டி கேட்டு இருக்கின்றனர். இதை மனதில் வைத்த ரவுடிகள் நள்ளிரவில் கார்த்திக் வீடு இருக்கும் தெருவுக்குள் பட்டா கத்தியுடன் இறங்கினர். மிரட்டல் விடுத்தபடி அங்கும் இங்கும் ஆயுதங்களுடன் நடந்தனர். தூங்கிக்கொண்டிருந்த மக்கள் சத்தம் கேட்டு எழும்பி வந்தனர். கார்த்திக்கும் அவரது அப்பா பாண்டியும் வீட்டின் வாசலில் நின்றனர். அவர்களை வெட்ட ரவுடிகள் ஓடி வந்தனர். கார்த்திக் உடம்பில் வெட்டு விழுந்தது. உடனே அப்பாவும் மகனும் வீட்டுக்குள் ஓடினர். அவர்கள் மீது ரவுடிகள் கல் வீசினர். மக்கள் ஒன்று திரண்டு ஓடி வந்தனர். இதனால் ரவுடிகள் அங்கிருந்து தப்பினர். இதற்கிடையே ரவுடிகள் பட்டா கத்தியுடன் தெருவில் உலா வருவது, கார்த்திக்கை வெட்டுவது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜூலை 07, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

thangam
ஜூலை 10, 2025 06:45

அப்பா ஆட்சியா அப்படித்தான் இருக்கும்


subramanian
ஜூலை 07, 2025 19:09

ஸ்டாலின் விடியாத அராஜக ஆட்சிக்கு சங்கு ஊதி கொள்ளி போடுங்க மக்களே.


Padmasridharan
ஜூலை 07, 2025 16:51

காவல்துறை பணம் வாங்கி குற்றங்களுக்கு, கண்டும் காணாமல் இருப்பதனால்தான் இந்த மாதிரி தைர்யமுள்ள இளைஞர்கள் தட்டி கேட்டு சாகிறார்கள் சாமி.


Krishnamurthy Venkatesan
ஜூலை 07, 2025 16:48

ரவுடிகளுக்கு பட்டப் பெயர் கொடுப்பது யார்? ரவுடிகள் அராஜகம் செய்கிறார்கள். இவர்களை தட்டி கேட்டால் கொலை வெறி தாக்குதல். பின்னர் எப்படி இவர்கள் மீது புகார் கொடுப்பார்கள்? எனவே காவல் துறையினரே இரவு ரோந்து செல்ல வேண்டும். புகார் கொடுப்பவர்கள் விவரத்தை வெளியில் தெரியப்படுத்த கூடாது.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ