3 இளைஞருக்கு சோகம்; மயிலாடுதுறையில் சம்பவம் mayiladuthurai accident 3 youth death bus driver escape
மயிலாடுதுறை அருகே உள்ள ஆளவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் வயது 27. இவர் நேற்று இரவு 7.30 மணியளவில் சீர்காழிக்கு பைக்கில் புறப்பட்டார். கதிராமங்கலத்தில் சென்றபோது, கன்னியாகுடி ரோட்டில் இருந்து மணிகண்டன் 22, அவரது நண்பர் ஜெயசீலன் 19 ஆகியோர் ஒரு பைக்கில் மெயின் ரோட்டுக்குள் நுழைந்தனர். அப்போது, இரு பைக்குகளும் மோதிக் கொள்வது போல வந்தன. சமாளித்து ஓட்டிச் சென்ற புருேஷாத்தமனை முந்திச் செல்ல நினைத்து மணிகண்டன் வேகத்தை கூட்டினார். புருேஷாத்தமன் பைக்கை மணிகண்டன் முந்த முயன்றபோது, எதிரே சீர்காழியில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இரு பைக்குகள் மீதும் பஸ் மோதியது. இந்த விபத்தில் மணிகண்டன் ஜெயசீலன் புருஷோத்தமன் மூவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் விரைந்து வந்து மூவரின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து நடந்ததும் பஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.