தயாநிதிக்கு செய்யப்பட்ட ஆபரேஷன் என்ன? mk azhagiri| dayanithi discharge
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதிக்கு கடந்த டிசம்பரில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். துரைக்கு மூளையின் ரத்த குழாயில் அடைப்புகள் இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். அறுவை சிகிச்சை செய்து அகற்றினர். மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் கடந்த மார்ச் 14ல் சேர்க்கப்பட்டார். உயர் சிகிச்சை அளிக்க கூடிய வார்டில் தயாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தனி மருத்துவ குழு 24 மணிநேரமும் உடல்நிலையை கண்காணித்து வந்தனர்.
செப் 24, 2024