/ தினமலர் டிவி
/ பொது
/ உள்ளூர் முகவரியில் போலி ஆதார் கிடைத்தது எப்படி? Bangladesh peoples at Tirupur| Bangladeshis arrest
உள்ளூர் முகவரியில் போலி ஆதார் கிடைத்தது எப்படி? Bangladesh peoples at Tirupur| Bangladeshis arrest
திருப்பூரில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக வந்த புகாரையடுத்து போலீசார் ஆய்வு செய்தனர். கடந்த வாரம் 6 வங்கதேசத்தினர் சிக்கினர். 2 தினங்களுக்கு முன், வெங்கமேடு பகுதியில் 1 பெண் உட்பட 3 பேர் பிடிட்டனர். அவர்கள் திருப்பூர் முகவரியில் ஆதார் கார்டு வைத்திருந்தனர். மாநகராட்சி அருகே மனு எழுதி தரும் பணி செய்து வரும் மாரிமுத்து என்பவர், ஒவ்வொருவரிடமும் 6,000 ரூபாய் பெற்றுக்கொண்டு போலி ஆவணங்கள் மூலம் ஆதார் கார்டு பெற்று தந்தது விசாரணையில் தெரிந்தது. அவரும் கைது செய்யப்பட்டார். இன்னும் எத்தனை பேர் சட்டவிரோதமாக தங்கியிருக்கிறார்கள் என்பது பற்றி விசாரிக்கப்படுவதாக போலீஸ் கமிஷனர் சுஜாதா கூறினார்.
செப் 28, 2024