/ தினமலர் டிவி
/ பொது
/ திருப்பூர் சம்பவத்தில் 7 மர்மம்-பகீர் தகவல் | Palladam case | tirupur crime case | tirupur police
திருப்பூர் சம்பவத்தில் 7 மர்மம்-பகீர் தகவல் | Palladam case | tirupur crime case | tirupur police
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் மூன்று பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் மொத்த தமிழகத்தையும் உலுக்கிப்போட்டுள்ளது. தோட்டத்து வீட்டில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த தெய்வசிகாமணி வயது 76, அவரது மனைவி அமலாத்தாள் வயது 70, இவர்களது 48 வயது மகன் செந்தில்குமார் அடித்தும், வெட்டியும் கொல்லப்பட்டனர். அதிகாலையில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவத்தில் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. நகை, பணத்துக்காக நடந்ததா அல்லது முன்விரோதத்தில் நடந்ததா என ஒரு பிடியும் கிடைக்கவில்லை.
நவ 30, 2024