/ தினமலர் டிவி
/ பொது
/ பரையந்தாங்கல் படையெடுக்கும் ஆந்திரா அதிகாரிகள்: அப்படி என்ன ஸ்பெஷல்? | Parayanthangal Gram Panchayat
பரையந்தாங்கல் படையெடுக்கும் ஆந்திரா அதிகாரிகள்: அப்படி என்ன ஸ்பெஷல்? | Parayanthangal Gram Panchayat
பசுமை போர்த்திய வயல்களுக்கு இடையில் மிக நேர்த்தியான ரோடு. ஊருக்குள் நுழைந்ததும் ஒரு வித அமைதி. திரும்பிய இடமெல்லாம் பளிச்சென்று காணப்படும் தெருக்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பிளாஸ்டிக் குப்பைகளே இல்லை. விழுப்புரம், மேல்மலையனூர் அருகே உள்ளது இந்த அழகான பரையந்தாங்கல் கிராமம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயமே பிரதான தொழில். பெரிய அளவில் வருமானம் இல்லாத போதிலும் தமிழகத்தின் முன் மாதிரி கிராமமாக மாறி உள்ளது.
அக் 19, 2025