உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எப்படியாவது கணவரை காப்பாத்துங்க: குழந்தையுடன் கதறும் பெண் | Pollachi Sub-Collector | Rajkumar

எப்படியாவது கணவரை காப்பாத்துங்க: குழந்தையுடன் கதறும் பெண் | Pollachi Sub-Collector | Rajkumar

பொள்ளாச்சி, ராமபட்டினம், வடக்கு வீதியை சேர்ந்தவர் ராஜ்குமார். மனைவி பவித்ரா. 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜ்குமார் கடந்த ஆண்டு மலேசியா வேலைக்கு போனார். டூரிஸ்ட் விசாவில் சென்ற அவருக்கு இதுவரை வொர்க் பர்மிட் வழங்கவில்லை. 18 மணி நேரம் வேலை செய்ய வைக்கின்றனர். உணவு சரியாக வழங்குவதில்லை. அடைத்து வைத்துள்ளனர் என மனைவியிடம் புலம்பி உள்ளார். இது குறித்து பவித்ரா பொள்ளாச்சி சப்-கலெக்டர் ஆபீஸில் புகார் அளித்தார். கணவரை மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அக் 06, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Arul. K
அக் 06, 2025 15:56

சென்றது டூரிஸ்ட் விசாவில் அப்புறம் எப்படி விசா கொடுப்பார்கள். எப்படியும் சமாளித்துக்கொள்ளலாம் என்று தெரிந்தேதான் சென்றிருப்பார்கள். இப்போது புலம்பி என்ன பிரயோஜனம். முடிந்தவரை யாரும் மலேசியாவிற்கு வேலைக்கு போகாதீர்கள். வாய்ப்பிருந்தால் சிங்கப்பூர் செல்லுங்கள். மிக மிக பாதுகாப்பான நாடு. அதுவும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் செல்லுங்கள். ஏஜெண்டை தவிருங்கள். நம்மிடம் முழு பணம் வசூலிக்கும்வரை உண்மை சொல்லமாட்டார்கள்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை