/ தினமலர் டிவி
/ பொது
/ எப்படியாவது கணவரை காப்பாத்துங்க: குழந்தையுடன் கதறும் பெண் | Pollachi Sub-Collector | Rajkumar
எப்படியாவது கணவரை காப்பாத்துங்க: குழந்தையுடன் கதறும் பெண் | Pollachi Sub-Collector | Rajkumar
பொள்ளாச்சி, ராமபட்டினம், வடக்கு வீதியை சேர்ந்தவர் ராஜ்குமார். மனைவி பவித்ரா. 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜ்குமார் கடந்த ஆண்டு மலேசியா வேலைக்கு போனார். டூரிஸ்ட் விசாவில் சென்ற அவருக்கு இதுவரை வொர்க் பர்மிட் வழங்கவில்லை. 18 மணி நேரம் வேலை செய்ய வைக்கின்றனர். உணவு சரியாக வழங்குவதில்லை. அடைத்து வைத்துள்ளனர் என மனைவியிடம் புலம்பி உள்ளார். இது குறித்து பவித்ரா பொள்ளாச்சி சப்-கலெக்டர் ஆபீஸில் புகார் அளித்தார். கணவரை மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அக் 06, 2025