உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / RSRM டாக்டர்கள் மீது பெண்ணின் கணவர் புகார் RSRM government Hospital Royapuram chennai royapuram poli

RSRM டாக்டர்கள் மீது பெண்ணின் கணவர் புகார் RSRM government Hospital Royapuram chennai royapuram poli

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் தமிழரசு 31 இவரது மனைவி வளர்மதி 22. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இரண்டாவது பிரசவத்துக்காக சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர் எஸ் ஆர் எம் அரசு மருத்துவமனையில் கடந்த 21 ஆம் தேதி அட்மிட் செய்யப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பிறகு கணவரிடமோ குடும்பத்தாரிடமோ ஒப்புதல் பெறாமல் வளர்மதிக்கு டாக்டர்கள் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துள்ளனர். அதனால் வளர்மதிக்கு முகம், கை, கால்கள் வீங்கி விட்டது. இரத்தப்போக்கு தொடர்கிறது. ரத்தப்போக்கை நிறுத்த டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதைக் கேள்விப்பட்டு ஆவேசமான கணவர் தமிழரசு ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். எங்களிடம் சொல்லாமல் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழரசன் வலியுறுத்தினார்.

பிப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை