/ தினமலர் டிவி
/ பொது
/ தேசத்துடன் ஒன்றுபட்டு நிற்கணும் சொந்த கட்சிக்கு சசிதரூர் பாடம் Speaking for the country |not for th
தேசத்துடன் ஒன்றுபட்டு நிற்கணும் சொந்த கட்சிக்கு சசிதரூர் பாடம் Speaking for the country |not for th
வர்த்தக ரீதியாக அழுத்தம் கொடுத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டையை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி வருகிறார். இதை சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு காங்கிரஸ் பல கேள்விகளை கேட்டுள்ளது. இச்சூழலில், அதிபர் ட்ரம்ப் சொல்வதற்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் கண்டனம் தெரிவித்தார். அதே சமயம், பாகிஸ்தான் தான் சண்டையை நிறுத்த கேட்டதாக ராணுவம் சொன்னதை ஆதரித்தார். இதனால், சசிதரூர் மீது காங்கிரஸ் தலைமை எரிச்சல் அடைந்தது. கட்சி கட்டுப்பாட்டை மீறி அவர் பேசுகிறார். லஷ்மண் ரேகையை மீறிவிட்டார். அவர் சொல்வது கட்சியின் கருத்து அல்ல என்றெல்லாம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
மே 15, 2025