நாடார் ஓட்டுகளை குறிவைத்து பாஜ போடும் திட்டம்
தமிழக பாஜவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இம்மாத இறுதிக்குள் மாநில தலைவர் வரை தேர்வு செய்ய வேண்டும். இச்சூழலில், கட்சி மேலிடம் அழைப்பை ஏற்று, முன்னாள் மாநில பாஜ தலைவர் தமிழிசை, டெல்லி சென்று பாஜ தலைவர் நட்டா, உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சிலரை சந்தித்துள்ளார். நாடார் சமூக பிரதிநிதி ஒருவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்க பாஜ முடிவு செய்துள்ளதாகவும், அதற்காகவே அவரை கட்சி மேலிடம் டெல்லி அழைத்ததாகவும் பாஜ வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பிரதான ஜாதியை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் அளிப்பதன் மூலம் அந்த சமூகத்தின் ஓட்டுகளை பெற முடியும் என பாஜ உள்ளிட்ட கட்சிகள் நம்புகின்றன.
ஜன 04, 2025