கள்ள சாராயம் விற்ற மாஜி திமுக நிர்வாகி கைது | TASMAC | Liquor
கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுக்க தேடுதல் வேட்டை நடக்கிறது. பல இடங்களில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த சாராய ஊரல்கள் அழிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் கள்ளச்சாராயம் விற்பது குறித்து போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. தானிப்பாடி, தண்டராம்பட்டு, மோரணம் உட்பட பல இடங்களில் சோதனை நடந்தது. நாவக்கரையில் சுடுகாடு பகுதியில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 கேன்களில் கள்ள சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
ஜூலை 05, 2024